நாங்கள் Snapchat-ஐ உருவாக்கத் தொடங்கியபோது, புகைப்படங்களுடன் தொடர்பாட தனித்துவமான, விரைவான மற்றும் வேடிக்கையான வழியை உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம். அந்த ஆரம்ப நாட்களில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். அதில் ஒன்று தான் தவறுகள் செய்து, அவற்றை ஒப்புக்கொண்டு, சரிசெய்வதன் மூலம் கற்றுக் கொள்வது.
உருவாக்கத்தில் நாங்கள் கவனத்தைச் செலுத்தியிருக்கும்போது, சில விடயங்கள் அவற்றிற்கான கவனத்தைப் பெறத் தவறுகின்றன. அவற்றில் ஒன்று தான் Snapchat சமூகத்துடன் தொடர்பு கொள்வதில் நாங்கள் அதிக துல்லியத்துடன் இருக்க வேண்டுமென்பது. இன்று காலை FTC உடன் இணங்கல் ஆணை செய்து கொண்டோம், இது ஆணையத்தால் எழுப்பப்பட்ட குறைகளைச் சரிசெய்கிறது. இன்றைய இணங்கல் ஆணை அறிவிக்கப்படுவதற்கு முன்பே எங்கள் தனியுரிமை கொள்கை, செயலி விவரக்குறிப்பு, செயலியினுள் உடனடி அறிவிப்புகளின் சொற்கள் அமைப்பினை மேம்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் அக்குறைகளில் பெரும்பாலானவற்றைத் தீர்த்தோம். தவறான பயன்பாட்டைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு, எதிர்நடவடிக்கைகளில் பாரிய முதலீடுகளைத் தொடர்ந்து செய்கிறோம்.
நாங்கள் பயனர் தனியுரிமையை ஊக்குவிக்கவும், Snapchat பயனர்கள் எப்படி, எவருடன் தொடர்பு கொள்கின்றனர் என்ற கட்டுப்பாட்டினை அவர்களுக்கு வழங்கவும் உறுதிபூண்டுள்ளோம். அதனை எப்போதும் தீவிரமாகக் கடைப்பிடித்தோம், இனியும் கடைப்பிடிப்போம்.