ஓர் குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவைப்படும் (அல்லது ஓர் நல்ல செவிலித்தாய் தேவைப்படுவார்) என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எங்கள் விசயத்திலும் ஓர் கிராமமே தேவைப்பட்டது. Snapchat சமூகத்திலிருந்து நாங்கள் பெற்ற அன்பினாலும் ஆதரவினாலும் பணிவும் பெருமகிழ்ச்சியும் அடைந்தோம்.
இது சொல்லிச் சொல்லி கொஞ்சம் தேய்ந்து போன வழக்கு என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், எங்களுக்கு முக்கியமான மூன்று எண்ணங்களைப் பகிர்வதற்கு ஏற்ற தருணமாய் இதை உணர்கிறோம். அடுத்த ஆண்டு Snapchat உருவாக்கத்தின் போது நாங்கள் எடுக்கும் முடிவுகளை இந்த எண்ணங்கள் இயக்கும்.
உண்மையான தருணங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். இது ஆடம்பர விடுமுறைகள், சுசி விருந்துகள், அல்லது அழகிய சூரிய மறைவுகளைப் பற்றியது மட்டுமன்று. சிலநேரங்களில் இது குழுவுக்குறி நகைச்சுவை, வேடிக்கையான முகம், அல்லது செல்ல மீனிடமிருந்து வரும் வாழ்த்தாக இருக்கலாம்.
அந்தத் தருணங்களைப் பகிர்வது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கும். நம்மை நன்கு அறிந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அது இன்னும் மகிழ்வூட்டுவதாய் இருக்கும். நம் நண்பர்களை விட நம்மைச் சிரிக்க வைப்பதில் சிறந்தவர்கள் யாருமில்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
குறுங்காலம் நீடிப்பவையும் மதிப்புள்ளவை. சிறந்த உரையாடல்கள் அற்புதமானவை. ஏனெனில் அவை பகிரப்படுகின்றன, மகிழப்படுகின்றன, சேமிக்கப்படுவதில்லை.
உங்கள் ஆதரவு அனைத்திற்கும் மீண்டுமோர் நன்றி.